மகாராணியின் உடல் வைக்கப்பட்டுள்ள பேழையை நோக்கி சென்றவர் கைது

லண்டன், செப் 17

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் அஞ்சலி செலுத்துபவர்கள் வரிசையில் இருந்து மகாராணி எலிசபெத்தின் உடலம் வைக்கப்பட்டுள்ள பேழையை நோக்கி சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொது ஒழுங்கு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதாக லண்டன் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் நிகழ்ந்தது.

இந்த சம்பவத்தை அடுத்து நேரடி காணொளி ஒளிபரப்பு சிறிது நேரம் துண்டிக்கப்பட்டது.

எனினும் பின்னர் அஞ்சலி நிகழ்வு தொடர்ந்தும் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *