தியாகத்தீபம் திலீபனின் 35 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொத்துவிலிருந்து ஆரம்பமான ஊர்தி பேரணியானது 3வது நாளாக திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியை இன்று சனிக்கிழமை 11.00 மணிக்கு வந்தடைந்தது.
இதன்போது சம்பூர் பகுதியிலுலுள்ள மக்கள் தியாகி திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, பூ தூவி தமது அஞ்சலிகளை செலுத்தினர்.
இன்று திருகோணமலையில் பயணிக்கும் இவ் ஊர்தி பேரணியானது இன்றிரவு முல்லைத்தீவு மாவட்டத்தைச் சென்றடைந்து நாளை ஞாயிற்றுக்கிழமை காலை முல்லைத்தீவிலிருந்து தமது ஊர்தி பேரணியை நான்காவது நாளாக தொடரவுள்ளது.
இப் பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், அக்கட்சியின் திருகோணமலை மாவட்ட முக்கியஸ்தர்கள், பொதுமக்களும் பங்குபற்றியிருந்தனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் செல்வராசா கஜேந்திரன் உரையாற்றுகையில்.
திலீபன் அண்ணாவின் நினைவுதின பேரணியில் பொதுமக்கள் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளபோதிலும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு பயப்படுகின்றார்கள்.
13 வது திருத்தச் சட்டம் எமக்கத் தேவையில்லை.அது பிரயோசனமற்றது.இந்தியா எம்மீது 13 வது திருத்தச் சட்டத்தை வழங்க முனைவதாக குற்றம் சாட்டினார்.
திலீபனின் தியாகத்தைப் பற்றி பேசினார்.
திலீபனின் பேரணியை குழப்புவதற்கும், அரசியல் வேணாம் எனவும் சிலர் வரிந்து கட்டி முன்வந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
தென்பகுதியிலுள்ள மக்கள் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட நாட்டின் தலைவரையே துரத்தி அடித்துள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.




பிற செய்திகள்