மின்சக்தித் துறை அமைச்சர் மற்றும் பல நிறுவன அதிகாரிகளுக்கிடையில் விசேட சந்திப்பு!

எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ள செயல் திட்டங்கள் தொடர்பாக மின்சக்தி மற்றும் சக்திவலுத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் தலைமையில் சில நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை மின்சக்தி மற்றும் சக்திவலுத்துறை அமைச்சில், துறைசார்ந்த நிறுவனங்களான இலங்கை மின்சார சபை, இலங்கை மின்சார தனியார் நிறுவனம், வரையறுக்கப்பட்ட நிலக்கரிக் கூட்டுத்தாபனம், வரையறுக்கப்பட்ட எல்.பி.என் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம், இலங்கை சூரியசக்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

அதேபோன்று, இலங்கை அணுசக்தி ஒழுங்காற்று சபை, கனியவளக் கூட்டுத்தாபனம், இலங்கை கனியவள களஞ்சிய கட்டமைப்பு நிறுவனம், இலங்கை கனியவள அபிவிருத்தி அதிகார சபை மற்றும் திருகோணமலை கனியவள கட்டமைப்பின் அதிகாரிகளும் சந்திப்பில் கலந்து கொண்டதாக மின்சக்தி மற்றும் சக்திவலுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *