ரயில் ஆசனங்களை இணையத்தில் முன்பதிவு செய்வதில் பயணிகள் மும்முரம்

புகையிரத ஆசனங்களை முன்பதிவு செய்வதற்கு சுமார் 100,000 பேர் தினமும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிரதி ரயில்வே பொது முகாமையாளர் (வணிக) வஜிர சமன் பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட திகதிக்கு 14 நாட்களுக்கு முன்பே இணையத்தில் இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் வலுவான தேவை காரணமாக, அது 30 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்ய மாற்றப்பட்டது என்றும் அவர் கூறினார்.

தினமும் காலை 10 மணிக்கு இணையத்தில் இருக்கைகளை முன்பதிவு செய்யலாம் என்றும், ஆனால் 10.10 மணிக்குள் இருக்கைகள் முன்பதிவு செய்யப்படுவதாகவும், எனவே ரயில் இருக்கைகளை ஒரு மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மிகவும் பொருத்தமான நடவடிக்கையாகும். ஆனால் ரயில்வே திணைக்களத்தில் தற்போதுள்ள வெற்றிடங்கள் அதற்கு இடையூறாக இருப்பதாகவும், அந்த வெற்றிடங்களுடன் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் ரயில்வே திணைக்களம் இதற்காக இரண்டு ஆண்டு திட்டத்தைத் தொடங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *