இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் ஜனதினம் இன்று!

இலங்கையின் முதலாவது நிதியமைச்சராகவும் அதிகார இராஜாங்க அமைச்சராகவும் இருந்த முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் 116 ஆவது ஜனதினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்நிலையில் 1906 ஆம் ஆண்டு செப்டெம்பர் 17 ஆம் திகதி கொழும்பு சேடவத்த வளவ்வயில் பிறந்த ஜே.ஆர்.ஜெயவர்தன, முன்னாள் நீதிபதியும் அரச சட்டத்தரணியுமான ஈ.டபிள்யூ.ஜெயவர்தன மற்றும் ஹெலினா ஆக்னஸ் விஜேவர்தன ஆகியோருக்குப் பிறந்த பதினொரு பிள்ளைகளில் மூத்தவராவார். ஜே.ஆர்.ஜெயவர்தன தொழில் ரீதியாக ஒரு சட்டத்தரணி.

அவர் 1943 இல் நடைபெற்ற களனி இடைத்தேர்தலில் போட்டியிட்டு அரச சபைக்குள் நுழைந்தார். 1947 பொதுத் தேர்தலில் களனித் தொகுதியில் வெற்றி பெற்று 1947 ஆம் ஆண்டு தொடங்கி ஏழு வருடங்கள் நிதி அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

மேலும் ஜே.ஆர். ஜயவர்தன, 1970 பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று கொழும்பு தெற்குத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரானார். பின்னர், அவர் 1977 வரை தேசிய அரச சபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் டட்லி சேனாநாயக்கவின் மரணத்துடன், அவர் கட்சியின் தலைவரானார்.

ஜே.ஆர்.ஜெயவர்தன 1977 பொதுத் தேர்தலில் அமோக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இலங்கையின்
7ஆவது பிரதமரானார்.

பின்னர் அவர் புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதன் மூலம் இலங்கையின் முதல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக 1978 நியமிக்கப்பட்டார்

மேலும்,முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்தன தேசிய இளைஞர் சேவைகள் சபை, இலங்கை அறக்கட்டளை நிறுவனம், கொழும்புத் திட்டம், சுதந்திர வர்த்தக வலயங்களை நிறுவி நாட்டுக்கு மகத்தான சேவையை ஆற்றியுள்ளார்.

விரைவுபடுத்தப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டம் கலாசார முக்கோணம், வேலை வங்கி முறை, விவசாய உத்தியோகத்தர் நியமனம் மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டம் போன்ற அவரது முயற்சிகளால் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்தனர். இந்த சளைக்க முடியாத அரசியல்வாதி, 26 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 1, 1996 அன்று காலமானார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *