
கொழும்பு, செப். 17: நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இறங்கு துறை பராமரிப்புப் பணியின் போது கடலில் விழுந்து காணாமல் போன பள்ளம பகுதியைச் சேர்ந்த 32 வயதான நபரை தேடும் பணியை பொலிஸார் முடுக்கியுள்ளனர்.
கல்பிட்டி கடற்படை முகாமின் அதிகாரிகளுடன் இணைந்து கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.