
கொழும்பு, செப். 17: புகையிரத ஆசனங்களை முன்பதிவு செய்வதற்கு சுமார் 100,000 பேர் தினமும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இதனால் பலருக்கு இருக்கைகள் கிடைப்பதில்லை என்றும் பிரதி ரயில்வே பொது முகாமையாளர் (வணிக) வஜிர சமன் பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.
தினமும் காலை 10 மணிக்கு இணையத்தில் இருக்கைகளை முன்பதிவு செய்யலாம் என்றும், ஆனால் 10.10 மணிக்குள் இருக்கைகள் முன்பதிவு செய்யப்படுவதாகவும், எனவே ரயில் இருக்கைகளை ஒரு மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.