புத்தளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிலைத் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது!

புத்தளம் வெளிவெட்ட வீதி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று அதிகாலை பிள்ளையார் சிலை திருட்டுபோயுள்ளதாக ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை ஆலய நிர்வாகிகள் சிலை சம்மந்தமாக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டப் பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸில் குதித்த பிள்ளையார் சிலை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றபட்ட பஸ் மற்றும் பிள்ளையார் சிலை புத்தளம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது சம்மந்தமாக புத்தளம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகத் தெரிவித்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *