
கொழும்பு.செப் 17
நாட்டுக்கு தேவையான அரிசி கையிருப்பில் உள்ளமையினால் அரிசி இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
சிறு போகத்தில் எதிர்பார்த்ததை விடவும் அறுவடை கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக இந்த ஆண்டு 6 இலட்சம் மெற்றிக் டன் அரிசி மாத்திரமே இறக்குமதி செய்யப்பட வேண்டும் என விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஸ்பகுமார தெரிவித்தார்.