காத்தான்குடி மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் நிகழ்வு!

மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் மீண்டும் பள்ளிக்கு போகலாம் நிகழ்வு இன்று நடைபெற்றது.

பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை நிருவாகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வில் 2000க்கு மேற்பட்ட பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி பிரதான வீதி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்துக்கு முன்பாக இருந்து பழைய மாணவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

தொடர்ந்து பாடசாலை மைதானத்தில் காலைக் கூட்டம் முன்னாள் அதிபர் எம்.எம்.மஹ்ரூப்கரீம் தலைமையில் நடைபெற்று உடற்பயிற்சி, கறாஅத் ஓதி தேசிய கீதம். பாடசாலை கீதம் பாடி நிகழ்வுகள் ஆரம்பமானது.

பின்னர் பழைய மாணவர்கள் பாடசாலை பழைய நினைவுகளை மீட்டதுடன் முன்பு கற்பித்த ஆசிரியர்களையும் சந்தித்தனர்.

பாடசாலை அதிபர் எம்.சி.எம்.ஏ.சத்தார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மீண்டும் பள்ளிக்கு போகலாம் பிரகடனம் நிறைவேற்றப்பட்டதுடன் பழைய மாணவர்கள் பாடசாலையின் தேவைகள் சிலவற்றை நிறைவேற்றவும் தாமாக முன்வந்தனர்.

இதில் பாடசாலையின் தேவைகள் பற்றிய கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டதுடன் பாடசாலையின் வரலாறு பற்றிய தொகுப்பு ஆவணப்படம் மற்றும் மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.

மேலும், நிகழ்வில் பழைய மாணவர்களின் இல்ல விளையாட்டு போட்டி. கலை நிகழ்வு என்பனவும் இடம் பெற்றன.

மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் டாக்டர்.எஸ்.எம்.எஸ்‌.உமர்மௌலானா, காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.எம.கலாவுதீன் உட்பட ஓய்வுபெற்ற அதிபர்கள். ஆசிரியர்கள் . பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

dav
dav

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *