போதைப்பொருள் வைத்திருந்த 19 வயதுடைய பெண் அதிரடி கைது!

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 19 வயதுடைய பெண் ஒருவர் புத்தளம் பிராந்திய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பிராந்திய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து புத்தளம் இப்னுபடுதா வீதியிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 10 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் கைப்பற்றப்பட்ட ஹெரோயினை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *