திருமலையில் மாணவர்கள் கௌரவிப்பு!

ஆங்கில தினத்திற்கான கோட்டமட்டப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான  வெற்றிச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும், வலயமட்டப் போட்டி நிகழ்ச்சியும் மற்றும் அதனைத் தொடர்ந்து வலயமட்டத்தில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கும் நிகழ்வும் (17) /தி/ புனித மரியாள் கல்லூரியில்  திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.

 குறித்த நிகழ்விற்கு  கந்தளாய் வலயக்கல்விப் பணிப்பாளர் E.P.G.I. தர்மதிலக்க அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நிகழ்வுகளைச் சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *