
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திப்பதற்கு அதிக நேரம் ஒதுக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் தினமும் முன்னாள் அதிபரின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்து வருகின்றனர்.
கோட்டபாய ராஜபக்ச அரசியலில் இருந்து ஒதுங்க முயற்சித்த போதிலும் அவரை மீண்டும் அரசியலில் ஈடுபடுத்துவதே இவர்களின் நோக்கமாக உள்ளதாகவும் அறியமுடிகிறது.
இதன் காரணமாக முன்னாள் அதிபரின் நாட்குறிப்பு கூட சில நாட்களில் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை முன்னாள் அmதிபர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடுவது குறித்து இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள கட்சி மாநாட்டின் போது முக்கிய பல தீர்மானங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்