
அஜர்பைஜான் நாட்டின் எல்லைப்பகுதியில் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரானுடனான எல்லையை கடக்க முயற்சித்த போதே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இவர்கள் தோஹா மற்றும் துபாயிலிருந்து அஜர்பைஜானின் பாகு பகுதிக்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஈரானின் எல்லை வழியாக, துருக்கிக்கு சென்று அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளில் ஒன்றுக்கு செல்வதே இவர்களின் திட்டமாக இருந்துள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட இலங்கையர்களிடம் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
பிற செய்திகள்