பாடத்திட்டத்தில் விளையாட்டுத்துறைக்கும் முக்கியத்தும் கொடுத்தால் மாணவர்களினதும் பெற்றோர்களினதும் உறவு வலுப்படுத்தும் – ரொசான் ரணசிங்க

பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை நீடிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

தற்போது இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதோடு இது கவலைக்குரிய விடயமாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாடத்திட்டத்தில் அனைத்தும் புகுத்தப்பட்டிருப்பினும் இது சாத்தியமாகவில்லை என்பதோடு கல்வி சார்பிலும் விளையாட்டுக்காக அதிக வளத்தை ஒதுக்குமாறு அமைச்சரிடம் கோரியுள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை குறைந்தது 2 மணித்தியாலங்களாவது, பிள்ளைகள் விளையாட்டில் ஈடுபடவேண்டும் எனவும் விளையாட்டுத் துறை கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *