
தலங்கம,செப் 18
தலங்கம – கொஸ்வத்த சந்திக்கு அருகில் நாவலப்பிட்டி நகரசபைத் தலைவர் அமல் பிரியங்கர மற்றும் அவரது சாரதியை தாக்கி துப்பாக்கியை அபகரித்துச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை கைது செய்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் வசிக்கும் தெற்கு தலங்கம பகுதியிலுள்ள வீடொன்றின் மேல் தளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம், நகர சபைத் தலைவர் கெப் வாகனம் ஒன்றில் பயணித்த போது அதனை சேதப்படுத்தி குறித்த சந்தேகநபர் நகரசபை தலைவர் மற்றும் அவரது சாரதியை தாக்கி அவர்களிடமிருந்து 500,000 ரூபா பணமும் துப்பாக்கியும் திருடப்பட்டிருந்ததாக முறைப்பாடளிக்கப்பட்டது.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தலவத்துகொட பகுதியில் முச்சக்கவரவண்டியை செலுத்திச்சென்ற போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதுடைய தெற்கு தலங்கம பகுதியைச் சேர்ந்த ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.