காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையான ஊர்திவழி கையெழுத்து போராட்டம் வவுனியாவை வந்தடைந்தது

<!–

காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையான ஊர்திவழி கையெழுத்து போராட்டம் வவுனியாவை வந்தடைந்தது – Athavan News

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்ககோரிய ஊர்திவழி கையழுத்து போராட்டம் இன்று (ஞாயிற்க்கிழமை) வவுனியாவை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையான ஊர்திவழி கையெழுத்து போராட்டம் காலை 10 மணியளவில் வவுனியா தமிழரசுகட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் ஆரம்பிக்கப்பட்டு நகரின் பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்டதாக அறியமுடிகின்றது.

குறித்த போராட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதி்ராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளையின் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டு தமது ஆதரவினை வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *