
ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உலகத்தலைவர்கள் இங்கிலாந்துக்கு சென்றடைந்துள்ளனர்.
மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் லண்டனில் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே இன்று ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில் மகாராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனைத்து நாடுகளின் தலைவர்களும் இங்கிலாந்தை சென்றடைந்துள்ளனர்.