சாவகச்சேரி விபத்து சிகிச்சை கட்டடம் ஒக்ரோபர் 9 இல் திறப்பு

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் நிர்மாணிக்கப்பட்ட குருதிக் காப்பகம், விபத்து சத்திர சிகிச்சைப் பிரிவு ஆகியவை எதிர்வரும் ஒக்ரோபர் 9ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளன.

மூன்று மாடிகளைக் கொண்ட இந்த விபத்து சத்திரசிகிச்சை கட்டடத்துக்கு கடந்த 2016ஆம் ஆண்டு அடிக்கல் நட்டு 2018 ஆம் ஆண்டு கட்டட வேலைகள் பூர்த்திசெய்யப்பட்டு சுகாதாரத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளை அடுத்து நீண்டகால இழுபறிக்குப் பின்னர் தற்போது மக்கள் சேவைக்காக திறந்துவைக்கப்படவுள்ளது.

அதற்கமைய ஏ–9 வீதி மற்றும் ஏ–32 வீதிகளில் இடம்பெறும் விபத்துக்களில் காயமடைவோரை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாது இங்கு சிகிச்சை அளிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *