கிண்ணியா அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவின் ஏற்பாட்டில் பள்ளி நிருவாகிகள் மற்றும் உலமாக்களுக்கான ஒரு நாள் செயலமர்வு கிண்ணியா சூரங்கல் பிரதேசத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஆஹிரா ஜும்ஆ பள்ளியில் இன்று (18 ) நடைபெற்றது.
இந்நிலையில், கிண்ணியா பிரதேசத்தில் குர்ஆன் மத்ரஸாக்களை ஒழுங்குபடுத்தல் தொடர்பிலும் அஹதிய்யா பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பிலும் போதைப் பொருளை கட்டுப்படுத்துதல் தொடர்பிலும் இளைஞர்களை ஒழுங்குபடுத்தல் தொடர்பிலும் திருமண ஒழுங்குகள் தொடர்பிலும் இச்செயலமர்வில் கலந்துரையாடப்பட்டது.
அகில இலங்கை ஜம்இயதுல் உலமா கிண்ணியா கிளையின் தலைவரும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறபு துறைத் தலைவருமான அஷ்ஷெய்ஹ் ஏ.ஆர்.நஸார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி, கிண்ணியா பொலிஸ் பொறுப்பதிகாரி சமிந்த பெர்ணான்டோ வான்எல பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.எச். அன்ஸார் அல்ஹித்மத்துல் உம்மா நிறுவனத்தின் தலைவர் கஸ்ஸாலி முஹம்மது பாத்திஹ்,குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.அஜித் கிண்ணியா மஜ்லிஷ் அஷ்ஷூறாவின் தலைவர் ஓய்வுபெற்ற அதிபர் ஏ.ஆர்.பரீட்,கிண்ணியா பள்ளிவாசல் சம்மேளன தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் வை.முஹ்மீன் , முன்னாள் ஜோர்தான் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் சட்டத்தரணி அப்துல் லாபீர் ஆகியோருடன் கிண்ணியா அனைத்துப் பள்ளி நிருவாகிகள் உலமாக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


பிற செய்திகள்