
எதிர்வரும் 28ஆம் , 29ஆம், 30ஆம் திகதிகள் மற்றும் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 3ஆம், 4ஆம், 5ஆம் ஆகிய தினங்களை உள்ளடக்கி விசேட தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரமாக மத்திய சுகாதார அமைச்சின் டெங்குக் கட்டுப்பாட்டு அலகினர் அறிவித்துள்ளனர்.
இந்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தில் யாழ்.மாவட்டத்தில் பத்து சுகாதார மருத்துவ அதிகாரி பணியக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் களப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அதன்படி யாழ்ப்பாணம், நல்லூர், உடுவில், தெல்லிப்பழை, சண்டிலிப்பாய், சங்கானை, கரவெட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரி, கோப்பாய் மற்றும் தெல்லிப்பழை ஆகிய சுகாதார மருத்துவ அதிகாரி பணியக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு பரிசோதனைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.