நாட்டில் தீவிரமடையும் எலிக்காய்ச்சல்!

நாட்டில் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த மாதத்தின் 17ஆம் திகதி வரை 5 ஆயிரத்து 275 பேர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 844 எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த காலப்பகுதியில் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான  நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 4 ஆகும்.

2020 ஆம் ஆண்டில் 8 ஆயிரத்து 579 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இவ்வருடம் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிறிதளவு குறைவடைந்துள்ளமையை காணக்கூடியதாக உள்ளதாகவும் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *