யுவதி உட்பட நால்வர் ஹெரோயினுடன் சிக்கினர்!

மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகேகொட நகரில் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களின்போது யுவதி ஒருவர் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

இச் சுற்றிவளைப்பில், மீகொட பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் 05 கிராம் 160 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவர் 05 கிராம் 120 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, பாணந்துறை வடக்கு பகுதியில் 26 வயதுடைய யுவதி ஒருவர் 04 கிராம் 260 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முகத்துவாரம், ஹேனமுல்லைப் பகுதியில் 02 கிராம் 710 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 57 வயதுடைய கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *