நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம் – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நால்லூரில் அமைந்துள்ள, அவரின் நினைவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது.

நினைவேந்தலுக்காக பொது அமைப்புக்களை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் சுடர் ஏற்றும் எண்ணெய் ஒருவர் மீது கொட்டியதில், நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதனை அடுத்து நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்டு குறித்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply