பிறந்து ஏழு நாட்களே ஆன சிசுவை 50,000 ரூபாய்க்கு விற்ற தாய்

பிறந்து ஏழு நாட்களே ஆன தனது கைக்குழந்தையை 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற சம்பவம் ஒன்று அனுராதாபுரத்தில் பதிவாகியுள்ளது.

நேற்று மாலை அனுராதபுரத்தில் உள்ள அரச வைத்தியசாலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும்,இதற்கு உதவிய தாதி ஒருவரின் கணவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரியவருகிறது.

அத்துடன் குறித்த பெண்ணுடன் வசித்து வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரையும், குழந்தையின் தந்தை, அரசாங்க வைத்தியசாலையின் தாதி, வைத்தியசாலையின் உதவியாளர் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பாடசாலை ஆசிரியர்கள் உட்பட மேலும் பலரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். .

பொருளாதார நெருக்கடி காரணமாக குறித்த பெண் குழந்தையை வாஹல்கட பிரதேசத்தில் உள்ள தம்பதியருக்கு விற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் தமக்கு ஒன்றரை வயது மகனும் இருப்பதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *