உயர் பாதுகாப்பு வலயங்களை அறிவிப்பதற்கு உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தினை பயன்படுத்த முடியாது!

உயர்பாதுகாப்பு வலயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக விலக்கிக்கொள்ளவேண்டும் என இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் எந்த நியாயமும் அடிப்படையும் அற்றது பொய்யானது என இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தை பயன்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள மனித உரிமை ஆணைக்குழு அதனடிப்படையில் அறிவிப்பை வெளியிட்டமை நாட்டின் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மோசமாக மீறும் செயல் எனவும் தெரிவித்துள்ளது.

உயர் பாதுகாப்பு வலயங்களை அறிவிப்பதற்கு உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தினை பயன்படுத்த முடியாது எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், உயர்பாதுகாப்பு வலயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக விலக்கிக்கொள்ளவேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ள இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு சர்வதேச தேசிய மனித உரிமை தராதரங்களை பின்பற்றவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *