ஜனாதிபதி ரணில் சிங்கப்பூர் பிரதமருடன் சந்திப்பு

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூவை சந்தித்துள்ளார்.

முன்னதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷியையும் சந்தித்த ஜனாதிபதி, அவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (திங்கட்கிழமை) காலை நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிற்பகல் டோக்கியோவை சென்றடைந்தார்.

அண்மையில் படுகொலை செய்யப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறவுள்ளதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரச தலைவர்கள் பலரும் அதில் கலந்துகொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *