
தம்புத்தேகமவில் 223 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்ற சந்தேகநபர்களை, தமது உயிரை பணயம் இன்றி கைது செய்த காவல்துறை சார்ஜன்ட்டுக்கு, வடமத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் மற்றும் மாகாணத்தின் சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தம்புத்தேகம பொருளாதார நிலையத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இந்தப் பணத்தை நகரிலுள்ள தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக கொண்டு சென்றுள்ளார்.
அதனை உந்துருளியில் வந்த இருவர் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துள்ளனர்.
பின்னர் அந்த இடத்திற்கு அருகில் பயணித்த தம்புத்தேகம காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை சார்ஜன்ட் புத்திக குமார, கொள்ளையர்களின் உந்துருளிக்கு முன்னால் வந்து வழி மறித்துள்ளார்.
இதன்போது, காவல்துறை சார்ஜன்ட் மீது கொள்ளையர்கள் மிளகாய்ப் பொடியை வீசி தாக்கியுள்ளனர், அதனையும் மீறி அப்பகுதி மக்களுடன் இணைந்து கொள்ளையர்களை கைதுசெய்ய அவர் நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதேவேளை, குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு உந்துருளி வழங்கிய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் ராஜாங்கணை பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்