
தம்புத்தேகம, செப்27
தம்புத்தேகம தனியார் வங்கிக்கு முன்பாக இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தில் ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்புத்தேகம பகுதியில் தனியார் வங்கிக்கு முன்பாக இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தில் இரண்டு பேரை ஆயுதங்களுடன் பொலிஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது