IMF உடனான இலங்கையின் பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்து ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் வரவேற்பு

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டோக்கியோவில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின்போது சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தை வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி வரவேற்றார்.

அத்துடன் இலங்கைக்கான கடன் வழங்குனர்களுடன் நடத்தப்படும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் ஜப்பான் முன்னணி பங்கை வகிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் கடந்த ஆட்சியில் பல முதலீட்டுத் திட்டங்களை இரத்துச் செய்ததைத் தொடர்ந்து, ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது வருத்தம் தெரிவித்தார்.

அந்த திட்டங்களை மீள ஆரம்பிக்க எதிர்பார்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களில் ஜப்பான் முதலீடு செய்ய வேண்டும் என்பதில் இலங்கை அரசாங்கம் ஆர்வம் காட்டுவதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *