அபுதாபி ரி-10 தொடரில் விளையாட ஏழு இலங்கை வீரர்கள் ஒப்பந்தம்!

ஆறாவது அபுதாபி ரி-10 தொடரில் விளையாட ஏழு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, வனிந்து ஹசரங்க – நோர்தன் வோரியஸ் அணிக்காகவும், தசுன் ஷனக – சென்னை பிரேவ்ஸ் அணிக்காகவும், பானுக ராஜபக்ஷ – சென்னை பிரேவ்ஸ் அணிக்காகவும், சாமிக்க கருணாரத்ன – சாம்ப் ஆர்மி அணிக்காகவும், துஷ்மந்த சமீர – நோர்தன் வோரியஸ் அணிக்காகவும், மகேஷ் தீக்ஷன – சென்னை பிரேவ்ஸ் அணிக்காகவும், மதீஷ பத்திரன – பங்களா டைகர்ஸ் அணிக்காகவும் விளையாடுகின்றனர்.

எட்டு அணிகள் பங்கேற்கும் ஆறாவது அபுதாபி ரி-10 தொடர், நவம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *