திலீபன் நினைவேந்தல் விவகாரம்: பண பங்கிடலில் தகராரா?

கொழும்பு, செப்.27

தியாகி திலீபன் நினைவிடத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோதல் தமிழர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாடுகளை வன்மையாக கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் இச் செயற்பாடுகள் தொடர்பில் சிங்கள இனவாத ஊடகங்கள் மகிழ்ச்சியான தொனியை வெளிப்படுத்தியுள்ளன.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பும், வி.மணிவண்ணன் தரப்பினரும் மோதிக் கொண்டதாகவும், புலம்பெயர் தரப்பிலிருந்து அனுப்பப்பட்ட பணத்தை பங்கிடுவதில் ஏற்பட்ட தகராறே மோதலிற்கு காரணமாக அமைந்திருக்கலாமென்றும் அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *