வன்முறை சம்பவம் பற்றிய விசேட குழுவின் அறிக்கை விரைவில் நாடாளுமன்றுக்கு!

மே 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலான விசேட குழுவின் அறிக்கை நாடாளுமன்றில் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவின் அறிக்கை கடந்த 8ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாகவும் அறிக்கையின் பிரகாரம் பாதுகாப்பு தரப்பில் குறைபாடுகள் இருப்பின் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்திற்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *