இலங்கையில் உணவுப்பாதுகாப்பின்மை குறித்த எச்சரிக்கை சிவப்பு நிறத்திற்கு மாற்றம்!

உலக உணவுத்திட்டம், இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை குறித்த எச்சரிக்கை விளக்கை செம்மஞ்சள் நிறத்தில் இருந்து சிவப்பு நிறத்திற்கு மாற்றியுள்ளது.

இந்த வாரம் வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில், இலங்கையின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் அல்லது 37 வீதமானோர் பேர் உணவுப் பாதுகாப்பற்றவர்கள் என்றும் 74 வீதமானோர் குறைவான விருப்பமான உணவை உட்கொள்வோர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த புள்ளிவிவரங்கள் ஆச்சரியப்படும் வகையில் அமையவில்லை என்று ஆங்கில வார இதழின் ஆசிரியர் குறிப்பு குறிப்பிட்டுள்ளது.

கோவிட் தொற்றுநோய் மற்றும் உலகப்பொருளாதாரம் மந்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாட்டின் விவசாயப் பொருளாதாரத்தின் முதுகெலும்பை முறித்த முட்டாள்தனமான கொள்கை முடிவுகளே அவையாகும் என்று குறிப்பிட்டுள்ளது.

உணவு விடயத்திலும் உலகம் குழப்பத்தில் உள்ளது. இந்த வாரம், நியூயோர்க்கில் நடந்த ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் உணவுப்பாதுகாப்பின்மை என்ற தலைப்பு ஒரு தலைப்பாக இருந்தது.

உக்ரைனில் போர் மற்றும் காலநிலை மாற்றம் – வெள்ளம் மற்றும் வறட்சி பேரழிவு என்பன இதற்கு காரணங்களாக அமைந்துள்ளன. உணவு நெருக்கடிக்கு பல அடுக்குகள் உள்ளன என்று பலர் வாதிடுகின்றனர். சிலவற்றால் மோசடி செய்யப்பட்ட பொருளாதார மாதிரியுடன் தொடர்புடையது.

மக்களை ஏழ்மையாக வைத்திருக்கும் வறுமையின் அநீதியை முடிவுக்குக் கொண்டுவர போராடுவதாகக் கூறும் ஒக்ஸ்பாம், நிறுவனம், உணவுப் பற்றாக்குறை இருப்பதால் அனைவரும் அதிக உணவு விலையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறுகிறது.

எனினும் விலையுயர்களால், கோவிட் தொற்றுநோய்களின் போது மட்டும் 62 புதிய உணவுப் பில்லியனர்கள் வியாபாரிகள் மத்தியில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளனர்.

உலகின் முன்னணி தானிய வியாபாரிகள் சாதனை இலாபம் ஈட்டியுள்ளனர் என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது. இன்டர்-பிரஸ் சேர்வீஸ் என்ற உலகளாவிய செய்தி நிறுவனம், 800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், பெரும்பாலும் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் பட்டினியால் வாடுவதாக குறிப்பிடுகிறது.

45 நாடுகள் உண்மையில் பஞ்சத்தின் விளிம்பில் தத்தளிக்கின்றன. எனினும் 161 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான உண்ணாத உணவு வீணடிக்கப்படுவதாகவும், அமெரிக்காவைச் சுற்றியுள்ள நிலப்பரப்புகளில் கொட்டப்படுவதாகவும் கூறியுள்ளது.

இந்தநிலையில் மிகக் கடுமையான உணவுப் பேரழிவை நோக்கிச் செல்வதாக அடையாளம் காணப்பட்ட 45 நாடுகளில் இலங்கையும் ஒன்று. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள அறிக்கையின்படி, இந்த வாரம் வாழ்க்கைச் செலவு 66.2வீதத்தில் இருந்து 70வீதமாக ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையின் கிராமப்புறங்களில் குறிப்பாக மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையால் மிகவும் ஆபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் 2013இல் மன்மோகன்சிங் அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டத்தில் குறைப்பாடுகள் இருந்தாலும், அனைத்து இந்தியர்களுக்கும் உணவு உரிமை என்பது அடிப்படை உரிமையாக உள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள், துணை ஊட்டச்சத்து திட்டம் என்பன செயற்படுகின்றன.

சுமார் 760 மில்லியன் நிவாரண உணவு அட்டைகளை வைத்திருப்பவர்கள் நியாய விலைக் கடைகள் மற்றும் அரச தேசிய களஞ்சியங்களின் மூலம் மானிய விலையில் உணவு தானியங்களைப் பெறுகின்றனர்.

இது சமீபத்திய கொவிட் தொற்றுநோய்களின் போது ஏழைகளுக்கு ஒரு பெரிய உயிர்நாடியை வழங்கியது.ஒரு போட்டி அரசியல் கட்சியால் தொடங்கப்பட்ட திட்டத்தை தற்போதைய இந்திய அரசாங்கம் கைவிடவில்லை, மாறாக அதன் பலன்களை அங்கீகரித்து அதன் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த முயற்சிகளின் அனுபவத்திலிருந்து, இலங்கையில் இதேபோன்ற சட்டத்தின் மூலம் ஜனாதிபதி தனது நிறைவேற்று ஆணையை முறைப்படுத்துவதற்கான நேரம் இதுவாக இருக்கவேண்டும் ஆங்கில செய்தித்தாளின் ஆசிரியர் குறிப்பு பரிந்துரைத்துள்ளது.

உணவுப் பாதுகாப்பின்மை எந்த நேரத்திலும் உணவுக் கலவரங்களாகவும் சமூக எழுச்சியாகவும் உருவாகக் கூடாது என்றும் அந்த ஆசிரியர் குறிப்பு வலியுறுத்தியுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *