அக்கரப்பத்தனை- மோர்சன் தோட்ட வீதிகள் வடிகான்களைப் போன்று காட்சியளிக்கின்றன

அக்கரப்பத்தனை – மோர்சன் தோட்டத்திற்கு செல்லும் ஆறு கிலோமீட்டர் தூரம் கொண்ட பிரதான வீதியானது, 30 வருடங்களாக புனரமைப்பு செய்யாத காரணத்தினால் வடிகான்களைப் போன்று காட்சியளிக்கின்றது என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

500க்கும் மேற்பட்ட மக்கள் இப் பாதையை பயன்படுத்தி வரும் நிலையில், 80க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணிகள் வாகன வசதிகள் இல்லாமல் நடந்து செல்லுகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை எந்தவொரு வாகனமும் இவ்வீதியில் பயணிப்பதில்லை என்பதோடு முச்சக்கர வண்டி சாரதிகள் அதிக பணத்தை வசூலிக்கின்றனர்.

மேலும் அரசியல்வாதிகள் வாக்குறிதிகளை கொடுத்தாளும் அந்த வாக்குறுகள் நிறைவேற்றவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை 10 வருடங்களுக்கு முன்பு இப்பாதையின் ஊடாக சென்ற வாகனம் ஒன்று, 60 அடி பள்ளத்தில் விபத்துக்குள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *