உடவத்த காடு உடவசலவத்த என்றும் அழைக்கப்படுகிறது, இது வனவியல் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.
உடவத்த காடு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் புகலிடமாக அறியப்படுகிறது.
இது பல்வேறு சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் பல்லுயிர் பன்முகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டது. உடவத்த காட்டின் ஒரு எல்லை ஹந்தான மலைத்தொடர் வரை செல்கிறது.
உடவத்த காட்டில் இலங்கைக்கு சொந்தமான சுமார் 80 வகையான பறவைகள் மற்றும் சுற்றுலாப் பறவைகளை காணலாம்.
அவற்றில் சாம்பல் கிளி, மஹகோயா, அலுகோபியா, போலோஸ் கொட்டோருவா, தங்க முகம் கொண்ட கொட்டோருவா போன்ற பறவைகள் தனி இடத்தைப் பெறுகின்றன.
ஈர வலயத்தில் காணப்படும் தேரை இனங்கள், மணல் சிறுத்தை, சேவல், காட்டுப் பூனை,கங்காரு பல்லி மற்றும் பல சிறிய விலங்குகளையும் உடவத்த காட்டில் காணலாம்.
இந்தக் காட்டிற்குச் செல்ல சிறந்த நேரம் காலை 6 மணி முதல் 9 மணி வரையாகும். காரணம், அந்த நேரத்தில் விலங்குகளின் நடத்தையை நன்றாக கவனிக்க முடியும்.

வனவிலங்கு புகைப்படக் கலைஞர்கள் மற்றும் சுற்றுச்சூழல் புகைப்படக் கலைஞர்கள் அந்த நேரத்தில் தங்கள் கேமரா லென்ஸ்களில் மிக அழகான படங்களைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. விடியற்காலையில், காலை சூரிய ஒளியில் உடவத்த காடு மிகவும் வசீகரமான காட்சிகளை காண முடியும்.
எனினும் தற்போது உடவத்தை காடுகளின் சூழலியல் பெறுமதி நாளுக்கு நாள் குறைவடையும் நிலை உருவாகி வருகின்றது.
இன்று காதலர்களின் சொர்க்கமாக மாறியுள்ள இந்த காடு, தினமும் வரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் சுதந்திரத்திற்கு இவர்களின் நடவடிக்கை பெரும் இடையூறாகவுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டியது அவசியமாகிறது.
உடவத்த கலே எனப்படும் இந்த தனித்துவமான சூழல் பிரதேசத்தின் அழகையும் பெறுமதியையும் பாதுகாக்க அதிகாரிகள் பரந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால், அது எமது எதிர்கால சந்ததியினருக்கு பெரும் முதலீடாகும் என்றே கூற வேண்டும்.
பிற செய்திகள்