திருகோணமலை,மூதூர் பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மூதூர் பிரதேச செயலாளர் . எம். பி. எம். முபாரக் அவர்களின் தலைமையில் மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று(26) மாலை “இதயத்தால் பேசுகிறேன்” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.
மூதூர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரான . கப்சா ரிஸ்வான் எழுதிய “இதயத்தால் பேசுகிறேன்” எனும் கவிதை நூலுக்கான வெளியீட்டு உரையை பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் . பி. அரபாத் நிகழ்த்தியதோடு நூலுக்கான அணிந்துறையை ஓய்வு பெற்ற அதிபரும் பிரபல கவிஞருமாகிய மீரான் முகைதீன் அவர்கள் நிகழ்த்தினார். அதுபோல் சிறப்புரையை பிரதேச செயலாளர்கள் அவர்கள் நிகழ்த்த ஏற்புரையை நூலாசிரியர் கப்ஷா றிஸ்வான் செய்தார்.
பிரதேச செயலாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், கிராம நிர்வாக உத்தியோகத்தர் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு நூற் பிரதிகளைப் பெற்று நூல் ஆசிரியையை ஊக்கப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.


பிற செய்திகள்