தமிழகத்திற்கு செல்ல முற்பட்டு நடுக்கடலில் தவித்த இலங்கையர்கள்!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக 06 பேர் அகதிகளாக தமிழகத்திற்கு சென்ற நிலையில் இந்தியா எனத் தெரிவித்து நடுக்கடலில் இறக்கி விடப்பட்டனர்.

மன்னாரில் இருந்து படகு வழியாக தப்பிச் சென்றவர்கள் இந்தியாவின் ஆளுகையில் உள்ள திடல் எனத் தெரிவித்து தரை இறக்கி விடப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அகதிகள் நின்ற இடம் இந்தியாவின் ஆளுகை கரையோரம் அல்ல, இலங்கை ஆளுகைப் பிரதேசம் எனக் கண்டுகொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கை கடற்படை சம்பவ இடத்திற்குச் சென்று நடுக்கடலில் நின்ற ஆறுபேரையும் கைது செய்து வந்து மன்னார் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *