
பகிடிவதை என்பது பல்கலைக் கழகங்களில் பேசு பொருளாக காணப்படுகிறது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளாளர் கமல் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் ஊடக கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் பகிடி வதைக்கு உள்ளாகும் போது பெற்றோர்களின் மன நிலை எவ்வாறு காணப்படும்.
பல்கலைக்கழகங்களில் மாணவ ஒன்றியத்தின் தலைவர்கள் மற்றும் அவ் ஒன்றியத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற அரசியல் தலைவர்கள் இவ் பகிடி வதை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள்.
அதே போல பல்கலைக்கழகத்திற்கு வரும் மாணவர்களிற்கு பகிடி வதை செய்கின்றனர் என்று முறைப்பாடுகளும் செய்திருப்பது இல்லை. உண்மையில் இது கவலைக்குரிய விடயமாகும்.
கல்வி முறையில் மாற்றங்கள் வேண்டும் என கூறுகின்ற மாணவ ஒன்றியத்தின் தலைவர்கள் பகிடி வதையிற்கு உள்ளாவதை தடுக்க வேண்டும். பகிடி வதை மேற்கொள்ள கூடாது என ஏன் யாரும் கூறுவது இல்லை.
அதேபோல ஒரு பல்கலைக்கழகத்தில் பகிடி வதைக்கு உள்ளான மாணவர் ஒருவரிற்கு மேல் டயர் (Tyre) விழுந்தமையால் பக்கம் வாதம் ஏற்பட்டு இன்றும் அவரின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
மற்றும் சில மாணவர்களின் தவறான செயலால் இன்று இம் மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
பிற செய்திகள்