
கொழும்பு, செப்27
ஐக்கிய ராச்சியத்தினால் இலங்கைக்கு 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ் நிதி மனிதாபிமான அடிப்படையில் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த மனிதானபிமான அடிப்படையிலான நிதியானது பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறுவோர், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டோருக்கு பகிர்ந்தளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “குறித்த பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் வாழ்வாதார உதவிகள் ஊடாக பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறுவோர், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டோருக்கு பகிர்ந்தளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த காலங்களில் நெருக்கடிகளுக்கு ஏற்பட்டிருந்த மத்தியில் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய அமைப்புகளின் ஊடாக வழங்கப்பட்ட உதவிகளுக்கு மேலதிகமாக இந்த மனிதாபிமான நிதியுதவி வழங்கப்படுகிறது.