
ஜப்பான்,செப் 27
ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்ஷோ அபேயின் இறுதி ஊர்வலம் இன்று (27) டோக்கியோவின் நிப்பான் புடோக்கனில் முழு அரச மரியாதையுடன் இடம்பெற்றதுடன் அந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார்
சின்ஷோ அபேயின் உடலுக்கு ஜனாதிபதி மலர்க்கொத்து வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இதன்போது சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் பணிமனை பிரதானி சாகல ரத்நாயக்க அவர்களும் இணைந்து கொண்டனர்.