
யாழ்ப்பாணம், செப் 27
முச்சக்கர வண்டிகளுக்கு வாரம் ஒன்றிற்கு வழங்கப்படுகின்ற பெற்றோலை அதிகரித்து வழங்குவதற்கும், பதிவின்றி செயற்படுகின்ற முச்சக்கர வண்டிகளின் பதிவு செய்து ஒழுங்குபடுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் சங்கத்தின் தலைவர்
அல்பிறைட் டெனிஸ் தலைமையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சந்தித்து குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. – 27.09.2022