பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம்!(படங்கள் இணைப்பு)

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசத்தின் இவ்வருடத்திற்கான மூன்றாம் காலாண்டுக்கான பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இவ் விசேட கூட்டத்தில் வாகரை பிரதேசத்தில் தற்கால சூழ்நிலையில் சிறுவர்களின் நலன் , பாதுகாப்பு , பராமரிப்பு ,கல்வி , அபிவிருத்தி , தொடர்பில் கலந்துரையாடப்பட்டது .

குறிப்பாக, பாடசாலை இடைவிலகலை குறைப்பது தொடர்பாக தெரிவு செய்யப்பட்ட நான்கு பாடசாலைகளில் விசேட திட்டத்தை நடைமுறைப்படுத்தல் , போசனை குறைபாட்டை குறைப்பதற்கான வேலைத்திட்டம் , இளவயது திருமணத்தை குறைப்தற்கான விழிப்புணர்வு நிகழ்வுகளை பெற்றோர் சமூகத்திற்கு நடாத்துதல் , நிறுவனங்களின் ஒன்றிணைந்த செயற்பாட்டினுடாக அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தல் , சிறுவர் இல்ல அனுமதியை குறைத்தல் , சிறுவர் சட்ட நடைமுறைகளை அமுல்படுத்தல் போன்ற தீர்மானமங்கள் முன்னெடுக்கப்பட்டது .

அபிவிருத்திக் குழுவின் செயலாளரும் , சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தருமாகிய அ.அழகுராஐ் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எந்திரி. க. அருணன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் கு. பிரணவன், வலயக்கல்வி அதிகாரி, சிறுவர் பெண்கள் பொலிஸ் பொறுப்பதிகாரி, நன்டத்தை உத்தியோகத்தர் , அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் , கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *