கொழும்பில் திடீர் தீ 80 வீடுகள் முற்றாக எரிந்து நாசம் !

தொட்டலங்கா – காஜிமாவத்த பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் சுமார் 80 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கஜிமாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ, சுமார் 2 மணி நேர போராட்டத்தை அடுத்து கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, சுமார் 25 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதேவேளை வீடுகளை இழந்த 220 பேர் வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *