பொலிஸ் – படைத் தரப்புகளின் பரிசீலனையை தொடர்ந்து காலிமுகத்திடலில் அமைக்கப்பட்ட ஆர்ப்பாட்ட இடத்தை அகற்றப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக அறியவருகிறது.
காலி முகத்திடலில் போராட் டம் நடத்தப்படக் கூடாது. போராட்டங்களால் அங்குள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என பாதுகாப்பு செயலர் ஜெரல் கமல் குணரட்ன தெரிவித்தார்.
பாதுகாப்பு வட்டாரங்கள் கூடி ஆர்ப்பாட்ட இடத்தின் எதிர்காலம் குறித்துத் தீர்மானிக்கும்.
எனினும், ஜனாதிபதி செயலகத்தை சூழவுள்ள பகுதி தற்போது உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதால் போராட்டம் நடைபெறும் இடத்தில்கூட எந்தவிதமான போராட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்படாது.
ஆனால், மக்கள் வழமைபோன்று காலி முகத்திடலில் நேரத்தை செலவிட அனுமதிக்கப்படுவர் என்றும் கூறினார்.
பிற செய்திகள்