ஜனாதிபதி ரணில் இன்று பிலிப்பைன்ஸ் பயணம்

டோக்கியோ, செப்.28

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் இரண்டாவது நாள் இன்றாகும். ஜப்பான் பிரதமருடன் ஜனாதிபதி இன்று (28) உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று ஜப்பான் பேரரசரை சந்திக்க உள்ளார். அதன் பின்னர் பிலிப்பைன்ஸின் மெனிலா நகரில் ஆரம்பமாகவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *