இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் – வைகோ வலியுறுத்து

இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதவு வழங்க வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள அவர், ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீள வழங்க வேண்டும் என்பதை வலியறுத்த மனித உரிமைகள் பேரவையில் இந்தியா தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆகவே இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா தவறாமல் கலந்துகொண்டு அதற்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *