காட்டு யானைகளை விரட்ட ஒரு வருடத்திற்கு தேவையான பணம் இவ்வளவா?

காட்டு யானைகளை விரட்டுவதற்குத் தேவையான யானைக் குண்டுகளுக்காக அரசாங்கம் வருடாந்தம் 2800 மில்லியன் ரூபாவைச் செலவிட வேண்டியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யானைக்குண்டுகள் வருடத்திற்கு 14 இலட்சம் தேவைப்படுவதாகவும் அவற்றை உள்ளூர் பட்டாசு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்வதாகவும் வனவிலங்கு திணைக்களம் கூறுகிறது.

காட்டு யானைகள் விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் போது அவற்றை விரட்ட வனவிலங்கு திணைக்களம் மக்களுக்கு இலவசமாக யானை வெடிகளை வழங்குகிறது.

மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக, எதிர்காலத்தில் யானைக்குண்டுகள் கொள்வனவுக்கு தற்போதைய தொகையை விட அதிக பணம் செலவிட நேரிடும் எனவும் வனவிலங்கு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *