
ஸ்ரீலங்கா திரிபோஷா லிமிடெட் (SLT) நிறுவனத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கக்கூடிய ‘Nutri Bar’ என்ற புதிய பிஸ்கட் தயாரிப்பு அடுத்த சில நாட்களில் சந்தைக்கு வெளியிடப்படும் என ஸ்ரீலங்கா திரிபோஷா லிமிடெட்டின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த பிஸ்கட் அதிக சத்து நிறைந்தது என்றும் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் சோதனை ஆராய்ச்சிகள் ஏற்கனவே உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
திரிபோஷா கலவையில் வெண்ணெய், சீனி போன்றவற்றைச் சேர்த்து ‘நியூட்ரி பார்’ பிஸ்கட்கள் தயாரிக்கப்படுகின்றன.
புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு விநியோகிக்கப்படும் ‘திரிபோஷா’ அஃப்லாடாக்சின் என்ற புற்றுநோயைக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் சமீபத்திய குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.
சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த புதிய தயாரிப்பை குறிவைத்து சமூகத்தில் இந்த பொய் பரப்பப்பட்டுள்ளது. அரசாங்க நிறுவனமான ஸ்ரீலங்கா திரிபோஷா இந்த புதிய வகை பிஸ்கட்டை சந்தைக்கு அறிமுகம் செய்வதன் மூலம் நாட்டுக்கு நல்லதொரு முதலீட்டை மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.
இனிப்பு அல்லது கரைப்பான்கள் இல்லாத இந்த பிஸ்கட் தயாரிப்பை சந்தையில் கிடைக்கும் பிஸ்கட் பொருட்களுடன் ஒப்பிடும் போது இந்த நாட்டு மக்கள் மிகவும் நியாயமான விலையில் கொள்வனவு செய்ய முடியும்,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்