விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்! அரச வங்கி அதிகாரிகளிடம் அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் கீழ் தமது வர்த்தகத்தை பாதுகாக்க கடன் பெற்ற விவசாயிகளுக்கு உகந்த நிதி நிவாரணம் வழங்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அரச வங்கி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரச வங்கிகள் வழங்கிய கடனுக்கான வட்டி வீதத்தை அதிகரித்துள்ளமையினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் வங்கி அமைப்பைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை அவசியம் என கூறிய அவர், தேசத்தின் விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தற்போதைய வழிகாட்டுதல்களின் கீழ் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான தெரிவை ஆராயுமாறு அரச வங்கிகளை இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வலியுறுத்தியுள்ளார்.

அரச வங்கிகளின் தலைவர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *